நீதிபதி மா. இளஞ்செழியனுக்கு கிடைத்த மற்றொரு அங்கீகாரம்

மேல் நீதிமன்ற நீதிபதிகள் சங்கத்தின் தலைவராக நீதிபதி மா.இளஞ்செழியன் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
கடந்த 26ஆம் திகதி புதன் கிழமை அன்று, போட்டியின்றி ஏகமனதாக அவர் தெரிவு செய்யப்பட்டார்.
குறித்த தலைவர் பதவியைப் பெற்றுக் கொள்ளும் முதலாவது தமிழர் என்ற பெருமையையும் அவர் பெற்றுக் கொண்டுள்ளார்.
நீதித்துறையில் கடந்த 25 வருடங்களாக நீதிபதி இளஞ்செழியன் பணியாற்றி வருகின்றார்.
இவர் மேல் நீதிமன்ற நிதிபதியாக வடக்கு – கிழக்கின் பல பகுதிகளில் பணியாற்றியுள்ளார்.
திருகோணமலையில் ஏழரை வருடங்கள், கல்முனையில் ஒன்றரை ஆண்டுகள், யாழ்ப்பாணத்தில் மூன்றரை ஆண்டுகள்,
வவுனியா ஓராண்டு, மட்டக்களப்பு சிவில் மேல் முறையீட்டு நீதிமன்றில் ஓராண்டு என மொத்த 12 ஆண்டுகள் மேல் நீதிமன்றில் கடமையாற்றுகிறார்.
Related Post

வவுனியாவில் கரடி தாக்கி பொலிஸ் உத்தியோகத்தர் படுகாயம்
வவுனியாவில் கரடியின் தாக்குதலிற்கு இலக்காகி பொலிஸ் உத்தியோகத்தர் படுகாயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் [...]

T-56 ரக துப்பாக்கி உள்ளிட்ட பயங்கர வெடிப்பொருட்களுடன் பெண் ஒருவர் கைது
T-56 ரக துப்பாக்கி மற்றும் தோட்டாக்களுடன் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். பொலிஸாருக்கு [...]

தபால் வாக்களிப்பு ஒத்திவைப்பு – தேர்தல்கள் ஆணைக்குழு
எதிர்வரும் உள்ளூராட்சி சபை தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்புப் பதிவை ஒத்திவைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக [...]