கால்வாயில் தவறி விழுந்த 14 வயது மாணவன் வைத்தியசாலையில் உயிரிழப்பு


கால்வாய்க்குள் தவறி விழுந்த 14 வயது சிறுவன் மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டபோதும் உயிரிழந்துள்ளான்.

குறித்த சம்பவம் குருணாகல் பகுதியில் இடம்பெற்றுள்ளது. வௌர்ளத்தில் மூழ்கிய வீதியூடாக பாடசாலையிலிருந்து வீடு திரும்பிய போது கால்வாய்க்குள் தவறி வீழ்ந்த மாணவன், கால்வாய்க்குள் சிக்கியுள்ளார்.

விரைந்து செயற்பட்ட பிரதேசவாசிகள் இராணுவத்தை வரவழைத்து மாணவனை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டு, சுமார் ஒன்றரை மணி நேரத்தின் பின்னர் மாணவன் மீட்கப்பட்டுள்ளார்.

மீட்கப்பட்ட மாணவன் குருணாகல் போதனா வைத்தியசாலையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட பின்னர் சிகிச்சைகள் பலனின்றி மாணவன் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *