யாழில் இரு கிராமங்களுக்கிடையில் 4 நாட்களாக தொடரும் மோதல் – கடும் பதற்றம்


யாழ்.பருத்தித்துறை – துன்னாலை மேற்கில் உள்ள இரு கிராமங்களுக்கிடையில் கடந்த 4 நாட்களாக தொடர்ச்சியான மோதல் இடம்பெற்றுவரும் நிலையில், இருவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், 25 பேரை தேடுவதாக கூறியுள்ள பொலிஸார் 7 வீடுகள் சேதமடைந்துள்ளதாகவும், கற்கள், வாள்கள், போத்தல்களால் இந்த மோதல் நடப்பதாகவும் கூறியிருக்கின்றனர்.

மேற்படி கோஷ்டி மோதல் சம்பவம் தொடர்பான 7 முறைப்பாடுகள் தமக்கு கிடைத்துள்ளதாக தொிவித்திருக்கும் நெல்லியடி பொலிஸார். கடந்த 4 நாட்களுக்கு முன்னர் இரு தரப்பினரிடையில் உருவான மோதல் பின்னர் இரு கிராமங்களுக்கிடையிலான மோதலாக மாறியுள்ளதெனவும் கூறியிருக்கின்றனர்.

சம்பவத்தில் சிலர் காயமடைந்துள்ளனர். பொலிஸார் மற்றும் சிறப்பு அதிரடிப்படையினர் கடமைக்கு அமர்த்தப்பட்டுள்ளனர். எனினும் மோதல்கள் தொடர்கின்றன. நேற்று மாலை வரை இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் பெயர் குறிப்பிடப்பட்ட 25 பேர் தேடப்பட்டு வருகின்றனர்.

நேற்று நண்பகல் 12.30 தொடக்கம் மாலை 6.30 மணிவரை அடங்கியிருந்து மோதல் மீண்டும் நேற்றிரவு பதற்றத்தை ஏற்படுத்தியது என்று பொலிஸார் கூறினர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *