யாழில் போதைப் பொருள் பாவித்துக் கொண்டிருந்த இரு இளம்பெண்கள் கைது


யாழ்.பொம்மைவெளி பகுதியில் பாழடைந்த வீடொன்றுக்குள் இருந்து போதைப்பொருள் நுகர்ந்து கொண்டிருந்த இரு பெண்கள் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த சம்பவம் நேற்றிரவு இடம்பெற்றிருக்கும் நிலையில் கைதான பெண்களிடம் இருந்து சுமார் 2 கிராம் போதைப் பொருளும் பொலிஸாரினால் மீட்கப்பட்டிருக்கின்றது.

பொம்மைவெளிப் பகுதியில் உள்ள பாழடைந்த வீடொன்றில் வைத்து போதைப் பொருளை நுகர்ந்து கொண்டிருப்பதாக

யாழ்.மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸாருக்கு கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில் குறித்த இரண்டு பெண்களும்

யாழ்.மாவட்ட குற்றத்தடுப்புபிரிவின் போதைத்தடுப்பு பிரிவு பொறுப்பதிகாரி சாயிமேனன் தலைமையிலான குழுவினரால் கைது செய்யப்பட்டனர்.

28 மற்றும் 29 வயது மதிக்கத்தக்க இரண்டு பெண்களே இவ்வாறு கைது செய்யப்பட்டதுடன்,

விசாரணைகளுக்கு பின்னர் சந்தேக நபர்களை நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கும் பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *