300க்கும் மேற்பட்ட பொருட்களின் இறக்குமதிகளுக்கு தடை

பல்வேறு அத்தியாவசியமற்ற பொருட்களின் இறக்குமதிகளுக்கு மறு அறிவித்தல் வரை தற்காலிக தடை விதித்து சிறப்பு வர்த்தமானி ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.
நிதியமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இந்த வர்த்தமானியை வெளியிட்டுள்ளார்.
இதன்படி பொதியிடப்பட்ட பால் உட்பட்ட சுமார் 300 பொருட்களுக்கு தற்காலிக இறக்குமதி தடை விதிக்கப்பட்டுள்ளது.
போதுமான அந்நிய செலாவணி கையிருப்பை கையாளும் வகையில் இந்த தற்காலிக தடை விதிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
Related Post

திடீரென உயிரிழந்த பாடசாலை மாணவன் – பெரும் சோகம்
புத்தளம் தள வைத்தியசாலையில் திடீர் சுகயீனம் காரணமாக அனுமதிக்கப்பட்டிருந்த பாடசாலை மாணவன் ஒருவன் [...]

திருடர்களை பாதுகாக்க திருடர்களால் உருவாக்கப்பட்ட அரசாங்கம்
திருடர்களை பாதுகாத்துக்கொள்வதற்காக திருடர்களால் உருவாக்கப்பட்ட அரசாங்கமே இது. இப்படியான அரசாங்கத்துக்கு எவ்வாறு ஆதரவு [...]

மலையகத்தில் காணாமல்போன யுவதிகள் கொழும்பில்
அக்கரப்பத்தனையில் விறகு தேடச் சென்றிருந்த நிலையில் கடந்த 6 நாட்களாகக் காணாமல்போயிருந்த இரண்டு [...]