யாழ் வல்லையில் பற்றைக்குள் இருந்து முதியவரின் சடலம் மீட்பு

வல்லை பற்றைக்குள் இருந்து முதியவர் ஒருவரின் சடலம் இன்று நண்பகல் மீட்கப்பட்டுள்ளது.
மூன்று நாள்களாக காணாமற்போன முதியவரின் சடலம் என உறவினர்கள் அடையாளம் காட்டியுள்ளதாக வல்வெட்டித்துறை பொலிஸார் தெரிவித்தனர்.
தொண்டைமானாறு வல்லை வீதியைச் சேர்ந்த மயில்வாகனம் குருமூர்த்தி (வயது-75) கடந்த 17 ஆம் திகதி புதன்கிழமை காணாமல் போயிருந்தார்.
சடலம் உருக்குலைந்து காணப்படுவதனால் அவர் அணிந்திருந்த ஆடைகளை வைத்து உறவினர்கள் அடையாளம் காட்டியுள்ளனர் என்று பொலிஸார் கூறினர்.
வல்வெட்டித்துறை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
Related Post

பளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட முல்லையடி பகுதியில் விபத்து
பளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட முல்லையடி பகுதியில் ஏ9 வீதியில் பாதை மாறுவதற்காக துவிச்சக்கரவண்டியில் [...]

அரச வருமானம் அதிகரிப்பு – ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவிப்பு
2024 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் எதிர்பார்த்த அரச வருமானத்தை விட அதிகமாக [...]

யாழில் விடுதி முற்றுகை – இரு பெண்கள் உட்பட மூவர் கைது
யாழ்ப்பாணம் சுண்டுக்குளி பகுதியில் உள்ள தனியார் விடுதி ஒன்றில் நேற்றைய தினம் (29) [...]