இலங்கைக்கு 25 மில்லியன் டொலர்களை வழங்கும் அவுஸ்திரேலியா

இலங்கைக்கு மனிதாபிமான உதவியாக 25 மில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்கவுள்ளதாக அவுஸ்திரேலிய அரசாங்கம் தெரிவித்துள்ளது.
ஐக்கிய நாடுகள் சபையின் ஊடாக இலங்கைக்கு இந்த உதவிகளை வழங்குவதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
அதன் மூலம் இந்நாட்டு மக்களுக்கு தேவையான உணவு மற்றும் மருந்துகளை பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.
இந்த மனிதாபிமான உதவியின் மூலம் பொருளாதார நெருக்கடிக்குப் பின்னர் இலங்கைக்கு அவுஸ்திரேலியா வழங்கும் உதவித் தொகை 75 மில்லியன் அமெரிக்க டொலர்களாக உயரும் என்பது குறிப்பிடத்தக்கது.
Related Post

இலங்கையில் மீண்டும் கொவிட் அபாயம்
நாட்டில் பதிவாகியுள்ள கொவிட் இறப்புகளின் எண்ணிக்கை குறைந்துள்ள போதிலும், நாளாந்தம் குறைந்த எண்ணிக்கையிலான [...]

கேரளாவில் படகு சவாரியில் விபத்து – 22 பேர் பலி
கேரள மாநிலம் மலப்புரத்தில் ஏற்பட்ட படகு விபத்தில் பலி எண்ணிக்கை 22 ஆக [...]

நாற்பது இலட்சம் மானியகாசோலைகள் தென்னைப்பயிர்ச்செய்கை சபையால் வழங்கல்
26.01.2023 கிளிநொச்சி மாவட்ட தென்னைச்செய்கையாளர்களுக்கு நாற்பது இலட்சம் பெறுமதியான காசோலைகள் கிளிநொச்சி கூட்டுறவு [...]