இந்தோனேஷியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் – சுனாமி எச்சரிக்கை

இமை வானொலியை கேட்க இங்கே அழுத்தவும்

இந்தோனேஷியாவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதால், அங்கு சுனாமி எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.

இந்தோனேஷியா மௌமரேவில் இருந்து 95 கி.மீ வடக்கே இன்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவுகோலில் 7.6 ஆக பதிவாகி உள்ளது.

இதன் எதிரொலியால், கடலில் சுனாமி அலைகள் எழ வாய்ப்புள்ளதாகவும் பசுபிக் சுனாமி எச்சரிக்கை மையம் தெரிவித்துள்ளது.

சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதால், பாதிப்புகள் அதிகம் இருக்கலாம் எனவும் கருதப்படுகிறது.

முன்னதாக, இந்தோனேஷியாவின் சுமத்ரா தீவில் கடந்த 2004-ம் ஆண்டு டிசம்பர்.26-ம் தேதி ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் பேரழிவை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.