இன்றைய ராசி பலன் – இந்த ராசிகாரர்கள் எச்சரிக்கையுடன் இருக்கவேண்டிய நாள் -(09.12.2021)

இமை வானொலியை கேட்க இங்கே அழுத்தவும்

டிசம்பர் மாதம் 9ஆம் திகதி கார்த்திகை மாதம் 23ஆம் நாளுக்கான ராசிப்பலன்களை பார்க்கலாம்.

மேலும் இன்று சந்திரன் அவிட்டம் நட்சத்திரத்தில் சஞ்சாரம் செய்வதால் புனர்பூச நட்சத்திரத்தில் இருப்பவர்களுக்கு சந்திரஷ்டமத்தின் பாதிப்பு அதிகமாக இருக்கும். புணர்பூச நட்சத்திரத்தில் இருப்பவர்கள் அரசு, அரசு அதிகாரிகள், அரசியல்வாதிகள், இவர்களை விமர்சித்திப்பதற்கான அமைப்போ, அல்லது இவர்கள் மீது இருக்கும் அதிர்ப்தியை வெளிப்படையாக கோபத்துடன் பேசகூடிய நாளாக இன்றைய நாள் இருக்கும்.

மேஷம்:

மேஷ ராசிக்காரர்கள் பொருத்தவரையில் இன்றைய நாளில் கோபம் சற்று அதிகமாக இருக்கும். ஆனால் அதை வெளியே காட்டிகொள்ளமாட்டீர்கள். ஆனால் சரியான நேரத்தில் வெளிகாட்டிவீடுவீர்கள். மேலும் இராணுவ நடவடிக்கைகள், மருத்துவ சேவைகள், காவல்துறை நடவடிக்கைகள் கண்ணில் படகூடிய அமைப்பு இருக்கும்.

ரிஷபம்:

ரிஷப ராசிக்காரர்களே பொருத்தவரையில் இன்றைய தினம் ஏதாவது அபாரதம், வட்டி தொகை, அல்லது கொடுக்கல் வழங்கலில் விரையத்தையே அல்லது தேவையற்ற ஒரு விரையத்தை சந்திக்கவேண்டிய நாளாக இந்த நாள் இருக்கும். மேலும் ஹெல்மெட், வாகனத்தை சரியான இடத்தில் நிறுத்தாமல் சொல்வது, வாகன சட்டங்கள், உங்களுக்கு எதிராக போககூடிய நாளாக இன்றைய நாள் இருக்கும்.

மிதுனம்: மிதுன ராசிக்காரர்களை பொருத்தவரையில் இன்றைய நாள் மிகுந்த கவனத்துடன், எச்சரிக்கையுடனும், பொறுப்புடனே வாகனத்தை இயக்குவது நல்லது. வாகனத்தில் உரிய ஆவனங்கள் இல்லை என்றால் அதனை எடுத்துகொள்ளவேண்டும். மிகுந்த கவனத்துடன் இருக்கவேண்டிய நாளாக இந்த நாள் இருக்கும்.

கடகம்:

கடக ராசிக்காரர்களை பெருத்தவரையில் இன்றைய நாளில் உங்களுடைய செயல்பாட்டில் கூடுதல் கவனத்துடன் இருப்பது நல்லது. எந்த ஒரு விஷயத்தையும் ஒன்றுக்கு இரண்டு முறை சிந்தித்துச் செயலாற்றுவது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்கள் உடைய குணநலன்கள் அடிக்கடி மாறும் தன்மையுடன் இருப்பதால் கூடுமானவரை விழிப்புணர்வுடன் இருப்பது நல்லது.

சிம்மம்:

சிம்ம ராசிக்காரர்களை பெருத்தவரையில் இன்றைய நாள் சாதகமற்ற அமைப்பு என்பதால் சுபகாரியத் தடைகள் ஏற்படலாம். செய்யும் செயலில் நிதானத்துடன் இருப்பது உத்தமம். கணவன் மற்றும் மனைவி இடையே இருக்கும் கருத்து வேறுபாடுகள் நீங்கும். சுயதொழில் எதிர்பார்க்கும் லாபம் உண்டு. உத்யோகத்தில் இருப்பவர்களுக்கு மேலதிகாரிகளின் நட்புறவை ஏற்படும்.

கன்னி:

கன்னி ராசிக்காரர்களை பெருத்தவரையில் இன்றைய நாள் குடும்பத்தில் இருந்து வந்த குழப்பங்கள் தீர்ந்து மன அமைதி இருக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்கள் வெளியிடங்களில் நட்புறவுடன் இருப்பது நல்லது. புதிய நட்பு வட்டம் உங்களுக்கு ஏற்றத்தைக் கொடுக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு பகை அதிகரிக்கும்.

துலாம்:

துலாம் ராசிக்காரர்களை பெருத்தவரையில் இன்றைய நாள் அநியாயத்தை தட்டிக் கேட்கக் கூடிய ஒரு அமைப்பாக இருப்பதால் நிதானம் தேவை. தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு எதிர்பார்க்கும் சலுகைகள் கிடைக்கும். வேலை தேடி அலைந்து கொண்டிருந்தவர்களுக்கு நல்ல வேலை அமையும். ஆரோக்கியத்தை கவனியுங்கள்.

விருச்சிகம்:

விருச்சிக ராசிக்காரர்களை பெருத்தவரையில் இன்றைய நாள் உங்களுடைய நியாயமான கோரிக்கைகள் நிறைவேறக் கூடிய நல்ல நாளாக அமைய இருக்கிறது. தொழில் மற்றும் வியாபாரத்தில் ஈடுபட்டு உள்ளவர்களுக்கு பொருளாதார ரீதியான முன்னேற்றம் சிறப்பாக இருக்கும் என்பதால் குடும்பத் தேவைகளை எளிதில் பூர்த்தி செய்து விடுவீர்கள். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு அனுகூல பலன் உண்டாகும்.

தனுசு:

தனுசு ராசிக்காரர்களை பெருத்தவரையில் இன்றைய நாள் சாதகமற்ற அமைப்பு என்பதால் கூடுமானவரை வெளியிட பயணங்களின் போது கவனத்துடன் இருப்பது நல்லது. குடும்பத்தில் தேவையற்ற வாக்குவாதங்களை தவிர்த்து பொறுமையுடன் இருப்பது முக்கியம். சுய தொழிலில் லாபம் அதிகரிக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு அமைதி தேவை தேவையற்ற வாக்குவாதம் தேவையற்ற பிரச்சனைகளை ஏற்படுத்தும்.

மகரம்:

மகர ராசிக்காரர்களை பெருத்தவரையில் இன்றைய நாள் மனதில் இருக்கும் குழப்பங்களுக்கான விடை கிடைக்கக் கூடிய நல்ல நாளாக அமைய இருக்கிறது. தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு போட்டியாளர்களாக அதிகரிக்கும். சக பணியாளர்களை தட்டிக் கொடுத்து வேலை வாங்குவது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வேலைப்பளு அதிகாரிக்கும்.

கும்பம்:

கும்ப ராசிக்காரர்களை பெருத்தவரையில் இன்றைய நாள் குடும்பத்தில் குதூகலமான சூழ்நிலை காணப்படும். தடைப்பட்ட சுப காரிய முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு மேலதிகாரிகளின் தொந்தரவு ஏற்பட்டு மறையும். சுய தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு போட்டியாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும்.

மீனம்:

மீன ராசிக்காரர்களை பெருத்தவரையில் இன்றைய நாள் குடும்பத்தில் திடீர் அதிர்ஷ்டம் ஏற்பட வாய்ப்புகள் உண்டு. தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு நெளிவு சுளிவுகளை கற்றுக் கொள்ளும் பாக்கியம் அமையும். உத்தியோகத்தில் உள்ளவர்கள் நிதானத்தை கடைபிடிப்பது நல்லது. உணவு கட்டுப்பாடு மேற்கொள்வது ஆரோக்கியத்தை பாதுகாக்க உதவும்.