கிளிநொச்சியில் கணவன் மற்றும் மனைவி மீது கொடூர தாக்குதல்

கிளிநொச்சி பொலிஸ் பிரிவுக்குற்ப்பட்ட புளியம்பொக்கனை பகுதியில் 18.05.2022 நேற்றைய தினம் இரவு 1.00 மணியலவில் மூன்று கொள்ளையர்கள் வீடு புகுந்து தாக்குதல் நடாத்தியுள்ளனர்.
வீட்டில் இருந்த கணவன் மனைவி மீதே இவ்வாறு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
கணவரின் கை பகுதியில் வெட்டுக்காயங்களுடனும் மனைவி உலக்கையால் தாக்கப்பட்ட நிலையிலும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதேவேளை வீட்டிலிருந்த பல பொருட்களும் சேதப்படுத்தபட்டது. இந்த நிலையில் தாக்குதல் மேற்கொண்ட கொள்ளையர்கள் தப்பிச்சென்றுள்ளனர்.
சம்பவம் இடம்பெற்ற நிலையில் வீட்டிலிருந்த சிறுவர்களின் சத்தம் கேட்டு அயலவர்கள் உடன் சம்பவயிடத்திற்கு சென்றுள்ளனர்.
காயமடைந்த இருவரும் அயலவர்களின் உதவியுடன் கிளிநொச்சி வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.
சம்பவத்தில் களவாடப்பட்ட பொருட்கள் தொடர்பில் தெரியவரவில்லை எனவும், சம்பவம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிசார் தெரிவிக்கின்றனர்.
Related Post

ஜனாதிபதி மாளிகையிலிருந்த ஒரு கோடி ரூபாவுக்கும் அதிக பணம் காவல்துறையிடம்
கொழும்பு – கோட்டை ஜனாதிபதி மாளிகையில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பயன்படுத்தியதாக நம்பப்படும் [...]

பிள்ளைகளை பாலத்தில் விட்டுவிட்டு – ஆற்றில் குதித்த தாய்
18 மாத மகளையும் ஒன்பது வயது மகனையும் பாலத்தில் விட்டுவிட்டு பெந்தர ஆற்றில் [...]

தந்தையை அடித்து கொன்று உடலுக்கு தீ வைத்த மகன் – தாய் படுகாயம்
ஹோகந்தர வித்யாராஜ மாவத்தையில் மகனின் தாக்குதலில் தந்தை பரிதாபமாக உயிரிழந்துள்ளதாக மாலபே பொலிஸார் [...]