வெசாக் பௌர்ணமி தினத்தை முன்னிட்டு 244 கைதிகளுக்கு விடுதலை


வெசாக் பௌர்ணமி தினத்தை முன்னிட்டு (15) இம்முறை 244 சிறைக் கைதிகளுக்கு பொதுமன்னிப்பு வழங்கப்படவுள்ளது.

அரசியலமைப்பின் 34 வது பிரிவின் மூலம் ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களின்படி, அத்தகைய சிறப்பு அரச மன்னிப்பு அவர்களுக்கு வழங்கப்படவுள்ளது.

அதன்படி நாட்டிலுள்ள அனைத்து சிறைகளில் இருந்தும் 244 கைதிகள் விடுதலை செய்யப்பட உள்ளனர்.

சிறைச்சாலைகள் திணைக்களம் அறிக்கை ஒன்றை வௌியிட்டு இதனை தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *