காலி முகத்திடல் மோதல் – 9 பேர் வைத்தியசாலையில்

மஹிந்த ஆதரவாளர்களுக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையில் தற்போது மோதல் இடம்பெற்று வருகிறது.
இந்த சம்பவத்தில் காயமடைந்த 9 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும் அங்கு கண்ணீர்ப்புகை மற்றும் நீர்த்தாரைப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த சம்பவத்தில் ஊடகவியலாளர்கள் பலர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எவ்வாறிருப்பினும் போராட்டக்காரர்கள் தொடர்ச்சியாக கோட்டா கோ ஹோம் என கோசமெழுப்பி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
இதன் போது போராட்டக்காரர்களின் கூடாரங்களை மகிந்த ஆதரவாளர்கள் தீயிட்டு எரித்துள்ளனர். இதன் காரணமாக பெரும் பதற்ற நிலை ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Related Post

33,000 லீற்றர் எரிபொருளுடன் சென்ற பவுசர் விபத்து
திருகோணமலை ஐ.ஓ.சி எரிபொருள் களஞ்சியசாலையிலிருந்து ஹப்புத்தளை எரிபொருள் களஞ்சியசாலைக்கு எரிபொருளை ஏற்றிச் சென்ற [...]

மட்டக்களப்பில் குடும்பஸ்தர் தூக்கிட்டுத் தற்கொலை
மட்டக்களப்பு, வவுணதீவு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பருத்திச்சேனை கன்னன்குடா பிரதேசத்தில் உள்ள ஆற்றுப்பகுதியில் குடும்பஸ்தர் [...]

யாழில் குழந்தை பிரசவித்துள்ள 14 வயது சிறுமி – 73 வயதான முதியவர் கைது
யாழ்ப்பாண பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் 14 வயது மாணவி ஒருவர் குழந்தை ஒன்றை [...]