மொரட்டுவ பகுதியில் துப்பாக்கிச் சூடு – ஒருவர் காயம்

மொரட்டுவ – கொரலவெல்ல பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் காயமடைந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
உந்துருளியில் பயணித்த இருவர் இந்த துப்பாக்கிப் பிரயோகத்தை மேற்கொண்டுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
சம்பவத்தில் காயமடைந்த நபர் பாணந்துறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அலுபோமுல்ல பிரதேசத்தைச் சேர்ந்த 27 வயதுடைய ஒருவரே இவ்வாறு காயமடைந்துள்ளதாக காவல்துறை ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்களை தேடி விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக காவல்துறை ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.
Related Post

வவுனியாவில் கொடூரமாக கொல்லப்பட்ட குடும்பஸ்தர்
வவுனியா ஆச்சிபுரம் பகுதியில் அதே இடத்தை சேர்ந்த 30 வயதுடைய குடும்பஸ்தர் ஒருவர் [...]

மன்னாரில் சிறுவர்களை கடத்தும் கும்பல் – அரசாங்க அதிபரின் அவசர அறிவிப்பு
-மன்னார் அரசாங்க அதிபரின் அவசர அறிவிப்பு. மன்னாரில் அண்மை காலங்களாக சந்தேகத்திற்கு இடமான [...]

இலங்கையில் இளைஞர்களை கடத்திய பொலிஸார்
பதுளையில் இரண்டு இளைஞர்களை கடத்தி உடமைகளை கொள்ளையிட்ட குற்றச்சாட்டில் முன்னாள் பொலிஸ் கான்ஸ்டபிளும் [...]