இலங்கையில் மேலும் 02 கொரோனா மரணங்கள் பதிவு


இலங்கையில் நேற்று முன் தினம் 22 ஆம் திகதி கொவிட்-19 தொற்று காரணமாக மேலும் 02 கொவிட் மரணங்கள் பதிவாகி உள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உறுதிப்படுத்தியுள்ளார்.

இவ்வாறு உயிரிழந்துள்ளவர்களில் 01 ஆண்களும், 01 பெண்களும் உள்ளடங்குகின்றனர். என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இந்நிலையில், நாட்டில் கொரோனா தொற்று காரணமாக உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 16,502 ஆக உயர்வடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, கொரோனா தொற்று உறுதியான மேலும் 40 பேர் நேற்று அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *