யாழில் அடையாளம் காணப்படாத இளைஞன் ஒருவர் தூக்கிட்டுத் தற்கொலை

இமை வானொலியை கேட்க இங்கே அழுத்தவும்

யாழ் நகரில் இளைஞன் ஒருவன் தூக்கிட்டுத் தற்கொலை செய்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் ஸ்டான்லி வீதியில் மக்கள் வங்கிக் அருகிலேயே தூக்கில் தொங்கிய நிலையில் இளைஞர் ஒருவரின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

சடலமாக கண்டுபிடிக்கப்பட்டவர் இது வரை அடையாளம் காணப்படவில்லை என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இது கொலையா தற்கொலையா என்ற கோணத்தில் யாழ்ப்பாண காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை யாழ்ப்பாணம் காவல்துறையினர் மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்துள்ளனர்.