யாழ் சிறைச்சாலையில் கைதி ஒருவர் உயிரிழப்பு


யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த கைதியொருவர் திடீர் சுகவீனம் காரணமாக உயிரிழந்துள்ளார்.

கொழும்பு 12 இல் வசிக்கும் 44 வயதுடைய நபர் ஒருவர் நீதிமன்ற உத்தரவில் யாழ்ப்பாண சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்தநிலையில்,

நேற்று சனிக்கிழமை திடீர் சுகவீனம் காரணமாக மூச்சு விட சிரமப்பட்ட நிலையில் , யாழ் . போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *