வீதியில் பயணித்தவர்கள் மீது தாக்குதல்

வாள் ஒன்றுடன் வீதிக்கு வந்த நபர் ஒருவர் வீதியில் பயணித்தவர்கள் மீது தாக்குதல் நடத்திய சம்பவம் ஒன்று தலங்கம பிரதேசத்தில் பதிவாகியுள்ளது.
தலங்கம பிரதேசத்தின் டென்சில் கொப்பேகடுவ மாவத்தையில் நேற்று இரவு இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
குறித்த நபர் குடிபோதையில் இருந்ததாகவும், அவரது தாக்குதல்களால் 4 வாகனங்களும் மாகாண சபை கட்டிடமும் சேதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
பின்னர் அவரை கைது செய்வதற்கான நடவடிக்கைகளை தலங்கம பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.
சந்தேக நபர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளார்.
Related Post

மன்னாரில் அளவுக்கு அதிகமான போதைப் பொருள் பாவனை – இரு இளைஞர்கள் பலி
அளவுக்கு அதிகமான போதைப் பொருள் உள்ளீர்த்ததால் உயிரிழந்ததாக கருதப்படும் இரு இளைஞர்களின் சடலம் [...]

பாடசாலை மாணவர்களுக்கு போதைப்பொருள் விற்பனை செய்த சந்தேக நபர் கைது
பாடசாலை மாணவர்களுக்கு போதைப்பொருள் விற்பனை செய்த 47 சந்தேக நபர்களை பொலிஸார் கைது [...]

கொடூரமாக வெட்டிப்படுகொல்லபட்ட நிலையில் வயோதிப தம்பதிகள்
அம்பாந்தோட்டை – திஸ்ஸமஹாராம பொலிஸ் பிரிவில் (23.01.2023) நள்ளிரவு வயோதிபர்களான கணவனும், மனைவியும் [...]