வரி உயர்வுக்கு எதிர்ப்பு – வன்முறையில் 23 பேர் பலி


கிழக்கு ஆப்பிரிக்க நாடான கென்யாவில், வரி உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து தலைநகர் நைரோபியில் பொதுமக்கள் தன்னெழுச்சியாக போராட்டம் நடத்திய நிலையில், பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டில் 23 பேர் பலியாகினதாக வௌிநாட்டு ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன.

ஏற்கெனவே நிதி நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் கென்யாவில், வரி வீதத்தை உயர்த்த போவதாக அந்த நாட்டு ஜனாதிபதி ரூடோ அறிவித்தார்.

இதையொட்டி, கென்யா பாராளுமன்றத்திலும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்த பொதுமக்கள், கென்யா தலைநகர் நைரோபியில் பாராளுமன்றம் முன் திரண்டு தன்னெழுச்சியாக போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது ஆளும்கட்சி பாராளுமன்ற அலுவலகத்தில் புகுந்து சூறையாடியதுடன், பாராளுமன்றத்தின் ஒரு பகுதிக்கும் பொதுமக்கள் தீ வைத்தனர்.

நிலைமையை கட்டுக்குள் கொண்டுவர பொலிஸார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 23 பேர் பலியானதாகவும், நூற்றுக்கணக்கானோர் காயமடைந்து மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வௌிநாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.

இதனிடையே, கூடுதல் வரிவிதிப்பை மறுபரிசீலனை செய்யப் போவதாக கென்யா ஜனாதிபதி ரூடோ அறிவித்துள்ளதாக கூறப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *