13 வயது மாணவனை தாக்கிய பொலிஸார்

பொலிஸ் உத்தியோகத்தர்கள் குழுவினால் தாக்கப்பட்ட 13 வயது பாடசாலை மாணவர் அண்மையில் குருநாகல் போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
ஏர் ரைபிள் மற்றும் கையடக்கத் தொலைபேசியைத் திருடிச் சென்றதாகக் கூறி பொலிசார் தம்மை தாக்கியதாக மாணவர் தெரிவித்துள்ளார்.
சம்பவம் தொடர்பில் மாணவன் கூறுகையில்,
“முச்சக்கர வண்டி ஓட்டியவர் அடிக்கவில்லை. மற்றவர்களே என்னை தாக்கினர். தற்போது அதற்காக சிகிச்சை பெறுகிறேன்” என்றார்.