பிரித்தானிய நகரமொன்றின் முதல்வராக இலங்கை தமிழர்

இமை வானொலியை கேட்க இங்கே அழுத்தவும்

பிரித்தானியாவில் உள்ள நகரம் ஒன்றின் புதிய முதல்வராக இலங்கை தமிழர் ஒருவர் பதவியேற்றுள்ளார்.

தொழில் கட்சியின் உறுப்பினரான இலங்கை தமிழர் இளங்கோ இளவழகன் இப்ஸ்விச் (Ipswich) மாநகர முதல்வராக தெரிவு செய்யப்பட்ட நிலையில் பதவியை ஏற்றுக்கொண்டுள்ளார்.

இது குறித்து அவர் கருத்து தெரிவிக்கையில்,

“நான் இன்று மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன். இந்த பெரிய நகரத்தின் முதல்வராக இருப்பதில் மிகவும் பெருமைப்படுகிறேன்” எனவும் தெரிவித்தார்.

இவருக்கான வேட்புமனுவை சபையின் தலைவர் நீல் மெக்டொனால்ட் (Neil MacDonald) முன்மொழிந்துள்ளார்.

“போர் மற்றும் துன்புறுத்தலில் இருந்து தப்பி ஓடிய ஒரு ஏதிலியின் இந்த அறிவிப்பு, ஒரு புதிய வாழ்க்கையை உருவாக்கி இங்குள்ள சமூகத்திற்கு அவர் பங்களித்த ஒரு செய்தியை எடுத்துச்செல்லும்” என்று அவர் கூறியுள்ளார்.

கடந்த புதன்கிழமை இடம்பெற்ற இந்த பதவியேற்பின்போது இப்ஸ்விச் இந்து சமூகத்தின் உறுப்பினர்கள் பலரும் அதில் கலந்து கொண்டுள்ளனர்.

அதேவேளை முதல்வராக தெரிவு செய்யப்பட்ட இளவழகனுக்கு பலரும் தமது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.