பெய்ரூட் மீது இஸ்ரேல் தாக்குதல் – 2,000க்கும் மேற்பட்டோர் பலி


லெபனானின் தலைநகர் பெய்ரூட் மீது இஸ்ரேல் கடுமையான வான்வழித் தாக்குதல்களை நடத்தியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

கடந்த நாட்களில் 2 ஆயிரத்துக்கும் அதிகமானோர் கொல்லப்பட்டதாக லெபனான் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

அவர்களில் 127 சிறுவர்களும் 261 பெண்களும் அடங்குவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, இஸ்ரேலின் கட்டுப்பாட்டில் உள்ள கோலன் குன்றின் மீது ஆளில்லா விமானத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

இதன்போது இரண்டு இஸ்ரேலிய இராணுவத்தினர் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *