யாழ்ப்பாணத்தில் மின்சாரம் தாக்கி 24 வயது இளைஞர் உயிரிழப்பு

சோமசுந்தரம் வீதி, ஆனைக்கோட்டை பகுதியில் நேற்றைய தினம் காலை மின்சாரம் தாக்கியதில் உதயகுமார் உசாந்தன் (வயது 24) என்ற இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
குறித்த இளைஞன் காரம் சுண்டல் விற்பனை செய்யும் வண்டில் ஒன்றினை தயாரித்து, அதற்கு மின்சார வேலைகள் செய்துவிட்டு, மின்சாரம் செலுத்தினார். இதன்போது மின்சாரம் அவர்மீது பாய்ந்தது.
இந்நிலையில் அவர் உடனடியாக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு சிகிச்சையளிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ.ஜெயபாலசிங்கம் மேற்கொண்டார். பிரேத பரிசோதனைகளின் பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
Related Post

யாழ்.போதனா வைத்தியசாலை குடிநீரில் கிருமி தொற்று
யாழ்.போதனா வைத்தியசாலை குடிநீரில் கிருமி தொற்று ஏற்பட்டு வயிற்றோட்டம் உள்ளிட்ட உபாதைகள் ஏற்பட்டிருப்பதாக [...]

இலங்கையில் மீண்டும் பயங்கர விபத்து – பெண் உயிரிழப்பு, 26 பேர் காயம்
பதுளை – மீகஹகிவுல, யோதஉல்பத பகுதியில் பஸ்ஸொன்று பள்ளமொன்றில் கவிழ்ந்து விபத்துக்கு உள்ளானதில் [...]

சுமத்திரனின் பிரேரணை 51 மேலதிக வாக்குகளால் தோற்கடிப்பு
பாராளுமன்ற உறுப்பினர் சுமத்திரன் முன்வைத்த நிலையியற் கட்டளைகளை இடைநிறுத்தும் பிரேரணை 51 மேலதிக [...]