யாழ். புன்னாலைக்கட்டுவனில் வீடு புகுந்து வாள்வெட்டு – ஒருவர் படுகாயம்

யாழ்.புன்னாலைக்கட்டுவன் தெற்கு பகுதியில் உள்ள வீடொன்றுக்குள் நுழைந்த வன்முறை கும்பல் வீட்டின் மீதும், வீட்டிலிருந்தோர் மீதும் தாக்குதல் நடத்திவிட்டு தப்பிச் சென்றிருக்கின்றது.
மேற்படி தாக்குதல் சம்பவத்தில் ரதீஸ்தரன் (வயது 41) என்பவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். புன்னாலைக்கட்டுவன் தெற்கில் அமைந்துள்ள குறித்த வீட்டினுள்
நேற்றுமுன்தினம் வியாழக்கிழமை இரவு உட்புகுந்த வன்முறைக் கும்பல் வீட்டின் மீது பெற்றோல் குண்டை வீசி தாக்குதலை மேற்கொண்டதுடன் , வீட்டில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளையும் ,
வீட்டில் இருந்த பொருட்களையும் அடித்து நொறுக்கி அட்டகாசம் புரிந்துள்ளது. வீட்டில் இருந்த பெண்களையும் வாளினை காட்டி அச்சறுத்தி , அவர்களின் பெறுமதி வாய்ந்த கையடக்க தொலைபேசிகளையும் கொள்ளையடித்து சென்றுள்ளது.
சம்பவம் தொடர்பில் சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
Related Post

யாழில் கத்திக்குத்துக்கு இலக்காகி இளம் குடும்பஸ்தர் மரணம்
யாழ் இளவாலை – பிரான்பற்று முருகன் கோவிலுக்கு அருகாமையில் இடம்பெற்ற கத்திக்குத்தில் இளம் [...]

விடுதலை புலிகளால் புதைக்கப்பட்ட 715 லீற்றர் மண்ணெண்ணெய் மீட்பு
முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பொலீஸ் பிரிவிற்கு உட்பட்ட உடையார் கட்டுப்பகுதியில் தனியார் காணி ஒன்றினை [...]

புகையிரதத்தில் ஏற முற்பட்ட இளைஞன் தவறி விழுந்து மரணம்
மாத்தறை புகையிரத நிலையத்தில் நேற்று (17) இரவு இடம்பெற்ற விபத்தில் இளைஞன் ஒருவர் [...]