இன்று நள்ளிரவு முதல் சமையல் எரிவாயு விலை அதிகரிப்பு


லிட்ரோ சமையல் எரிவாயு நிறுவனம் இன்று (04) நள்ளிரவு முதல் அதன் விலைகளை அதிகரிக்க தீர்மானித்துள்ளதாக அதன் தலைவர் முதித பீரிஸ் தெரிவித்துள்ளார்.

விசேட ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் கலந்து கொண்டு அவர் இதனை தெரிவித்துள்ளார்.

இதன்படி, 12.5 கிலோகிராம் சமையல் எரிவாயு சிலிண்டர் 343 ரூபாவால் அதிகரிக்கப்படவுள்ளது.

இதற்கமைய, 12.5 கிலோகிராம் சமையல் எரிவாயு சிலிண்டரின் புதிய விலை 3470 ரூபாய் ஆகும்.

அதேபோல், 5 கிலோகிராம் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை 137 ரூபாவால் அதிகரிக்கப்படவுள்ள நிலையில், அதன் புதிய விலை 1393 ரூபாவாகும்.

அத்துடன் 2.3 கிலோ கிராம் சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை 63 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளதுடன் அதன் புதிய விலை 650 ரூபாவாகும் என லிட்ரோ எரிவாயு நிறுவனத்தின் தலைவர் முதித பீரிஸ் தெரிவித்துள்ளார்.

இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் வீட்டு சமையல் எரிவாயு சிலிண்டரின் விலையை அதிகரிக்க லாப்ஸ் கேஸ் நிறுவனமும் தீர்மானித்துள்ளது.

இதன்படி, 12.5 கிலோ கிராம் எடை கொண்ட லாப்ஸ் கேஸ் சிலிண்டரின் விலை 150 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளதுடன், அதன் புதிய விலை 3,985 ரூபாவாகும்.

மேலும் 5 கிலோ எடை கொண்ட லாப்ஸ் கேஸ் சிலிண்டரின் விலை 60 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளதுடன், அதன் புதிய விலை 1,595 ஆக அதிகரித்துள்ளது.

அத்துடன், லாப்ஸ் கேஸ் நிறுவனம் 2 கிலோ கிராம் எடை கொண்ட லாப்ஸ் கேஸ் சிலிண்டரின் விலையை 24 ரூபாவினால் அதிகரித்துள்ளதுடன் அதன் புதிய விலை 638 ரூபாவாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *