மதுபான விருந்தில் மோதல் – நபர் ஒருவர் கொலை

அனுராதபுரம் சீப்புக்குளம் பகுதியில் நேற்று (24) அதிகாலை நபர் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார்.
குறித்த பகுதியில் உள்ள வீடொன்றில் சிலர் கலந்து கொண்ட மதுபான விருந்தின் போதே இக்கொலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
விருந்தின் போது மோதல் ஏற்பட்டிருந்த நிலையில் பாதிக்கப்பட்டவர் அனுராதபுரம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.
சம்பவத்தில் அதே பகுதியைச் சேர்ந்த 58 வயதுடைய நபரே உயிரிழந்துள்ளார்.
நேற்று (23) பிற்பகல் உயிரிழந்தவரின் சகோதரர் உள்ளிட்ட சிலர் மதுபான விருந்தினை ஏற்பாடு செய்திருந்த நிலையில், அதில் கலந்துகொண்ட இருவரே இக்கொலையைச் செய்துள்ளனர்.
இருவரும் ஓய்வுபெற்ற இராணுவ அதிகாரிகள் என பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மிஹிந்தலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்
Related Post

2023ஆம் அன்டுக்ககாண வரவு செலவுத் திட்டதின் இறுதி வாக்கெடுப்பு
2023ஆம் நிதியாண்டுக்கான வரவு – செலவுத் திட்டம் மீதான இறுதி வாக்கெடுப்பின்போது வரவு [...]

கிளி பளையில் கோர விபத்து – 20 வயது இளைஞன் பலி, இருவர் காயம்
பளை – புலோப்பளை பகுதியில் மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதியதில் இளைஞர் [...]

இன்று மற்றும் நாளைய மின்வெட்டு நேரம் அதிகரிப்பு
இன்று (28) மற்றும் நாளை நவம்பர் (29 ஆகிய நாட்களில் இரண்டு மணித்தியாலங்கள் [...]