புகையிரதம் தடம் புரண்டு விபத்து – பலி எண்ணிகை 233 ஆக அதிகரிப்பு

ஒடிசா மாநிலத்தின் பாலசோரில் ஏற்பட்ட புகையிரத விபத்தில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 233 ஆக அதிகரித்து இருக்கிறது என்று ஒடிசா தலைமை செயலாளர் பிகே ஜெனா தெரிவித்துள்ளார்.
கிட்டத்தட்ட 900-க்கும் அதிகமானோர் பலத்த காயங்களுடன் வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு இருப்பதாக அவர் மேலும் தெரிவித்தார்.
ஹவுராவில் இருந்து சென்னை நோக்கி புறப்பட்ட கோரமண்டல் எக்ஸ்பிரஸ் புகையிரதம் யஷ்வந்த்பூர்- ஹவுரா அதிவேக எக்ஸ்பிரஸ் புகையிரதத்துடன் மோதி பெரும் விபத்து ஏற்பட்டது.
இந்த விபத்தில் 18-க்கும் அதிகமான புகையிரதபெட்டிகள் கவிழ்ந்து இருப்பதால் உயிரிழந்தோர் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது.
விபத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணிகளில் தேசிய பேரிடர் மீட்பு படையினர், ஒடிசா மாநிலத்துக்கான அவசரகால பேரிடர் விரைவு படை, தீயணைப்பு துறையினர் ஈடுபட்டு வருகின்றனர். இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணிகளும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
Related Post

கொழும்பு அதிவேக வீதியில் பேருந்து ஓட்டும் பெண்
இன்றைய காலக்கட்டத்தில் உலகில் நாளுக்கு நாள் பல்வேறு துறைகளிலும் பெண்கள் தங்களது திறமைகளை [...]

கார்நாடகாவில் 38 இலங்கையர்களின் போராட்டம் கைவிடப்பட்டுள்ளது
கார்நாடகாவில் 38 இலங்கையரையும் சந்தித்த அதிகாரிகள் நாட்டுக்கு அனுப்புவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூறியுள்ளனர். [...]

பொலிஸார் விடுத்துள்ள அவசர எச்சரிக்கை
பாதுகாப்பு படையினரின் கடமைகளுக்கு இடையூறு விளைவிப்பவர்களை தகுதி பாராமல் கைது செய்யுமாறு பொலிஸாருக்கு [...]