மாடியிலிருந்து விழுந்து 15 வயது மாணவி படுகாயம்

கண்டியில் உள்ள பாடசாலை ஒன்றின் 15 வயது மாணவி ஒருவர் நேற்று (9) பாடசாலை கட்டிடத்திலிருந்து தவறி விழுந்து படுகாயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த பாடசாலையில் தரம் 10 இல் கல்வி கற்கும் குறித்த மாணவி, கட்டிடமொன்றின் முதல் மாடியில் இருந்து குதித்து காயங்களுக்குள்ளான நிலையில் கண்டி பொது வைத்தியசாலையின் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
குறித்த மாணவி ஒரு மாணவர் தலைவர் எனவும், கட்டுகஸ்தோட்டை – களுகமுவ பிரதேசத்தில் வசிப்பவர் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
மாணவியின் தலையில் காயம் ஏற்பட்டுள்ளதைக் கண்டறிய CT ஸ்கேன் பரிசோதனைக்கு உட்படுத்தப்படும் என்றும் அதன் பின்னர் மேலதிக சிகிச்சை அளிக்கப்படும் என்றும் வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.
சம்பவம் தொடர்பில் கட்டுகஸ்தோட்டை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
Related Post

மாத்தறையில் பொலிஸார் – போராட்டக்காரர்கள் இடையில் கடும் மோதல்
இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார மற்றும் டொலர் நெருக்கடியால் மக்கள் பெரும் பாதிப்புகளுக்கு உள்ளாகியுள்ளனர். [...]

ஆப்கானிஸ்தானில் மூன்றாவது நிலநடுக்கம் பதிவு
ஆப்கானிஸ்தானில் சில நாட்களுக்குள் மூன்றாவது நிலநடுக்கமும் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது மேற்கு ஆப்கானிஸ்தானின் [...]

வெளிநாடுகளில் இருந்து இலங்கைக்கு வருபவர்களுக்கான அறிவிப்பு
வெளிநாடுகளில் இருந்து இலங்கைக்கு வருபவர்களுக்கு விதிக்கப்பட்டிருந்த சில கொவிட் விதிகள் இன்று (07) [...]