ஆஸ்கர் போட்டியில் இருந்து வெளியேறிய “ஜெய்பீம்”


94ஆவது ஒஸ்கார் விருதுகள் வழங்கும் நிகழ்வு எதிர்வரும் பங்குனி மாதம் 27 ஆம் திகதி நடைபெறவுள்ளது.

ஒஸ்கார் விருதுக்கான இறுதிப் பரிந்துரைப் பட்டியலில் இந்திய படங்கள் எதுவும் இடம்பெறவில்லை.

தமிழில் நடிகர் சூர்யா நடிப்பில் வெளியான ‘ஜெய் பீம்’ படமும், மலையாளத்தில் மோகன்லால் நடிப்பில் வெளியான ‘மரைக்காயர் அரபிக்கடலின் சிங்கம்’ படமும் ஆஸ்கர் விருதுக்கு தகுதிப் படங்கள் பட்டியலில் இடம்பிடித்திருந்த நிலையில், இறுதிப் பரிந்துரைப் பட்டியலில் இப்படங்கள் இடம்பெறவில்லை.

பங்குனி 27 ஆம் தேதி அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சலஸ் நகரில் உள்ள டால்பி திரையரங்கில் வெற்றி பெற்றவர்கள் பெயர்கள் படங்கள் அறிவிக்கப்பட உள்ளன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *