ஆரம்ப கல்வி தொடர்பில் வழங்கப்பட்டுள்ள அதிகாரம்

உயர்தர பரீட்சை நடைபெறும் தினங்களில் ஆரம்ப வகுப்புக்களை நடத்துவது தொடர்பில் தீர்மானங்களை மேற்கொள்வதற்கு கல்வி அமைச்சினால் மாகாண பணிப்பாளர்களுக்கு அதிகாரங்கள் வழங்கப்பட்டுள்ளன.
எதிர்வரும் 7 ஆம் திகதி தொடக்கம் மார்ச் மாதம் 5 ஆம் திகதி வரை உயர்தர பரீட்சை நடைபெறவுள்ளது.
இதனை முன்னிட்டு நாளை தொடக்கம் மார்ச் மாதம் 5 ஆம் திகதி வரை பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்குவதற்கு கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது.
இருப்பினும் இந்த காலப்பகுதியில் ஆரம்ப வகுப்பு கல்வி நடவடிக்கைகளை நடத்த வேண்டும் என கல்வி அமைச்சு இதற்கு முன்னர் தெரிவித்திருந்தது
இருப்பினும் இவ்வாறு ஆரம்ப தர வகுப்புகளை நடத்துவதினால் உயர்தர பரீட்சைக்கு இடையூறு ஏற்படுமானால் சம்பந்தப்பட்ட பணிப்பாளர்கள் ஊடாக மாகாண கல்வி பணிப்பாளருக்கு அறிவிக்க வேண்டும் என கல்வி அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
இதற்கு அமைவாக ஆரம்ப தர வகுப்பு மாணவர்களுக்கு விடுமுறையை வழங்குவதற்கு மாகாண கல்வி பணிப்பாளர்களுக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related Post

O/L பரீட்சை பெறுபேறுகள் குறித்து கல்வி அமைச்சரின் அறிவிப்பு
இரண்டு மூன்று நாட்களுக்குள் 2023 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப் [...]

இன்று முதல் பாடசாலைகள் ஆரம்பம்
அரச பாடசாலைகள் மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகளின் மூன்றாம் தவணை [...]

அரச பாடசாலைகளுக்கு நாளை விடுமுறை
ஹட்டன் கல்வி வலயத்திற்குட்பட்ட அனைத்து அரச பாடசாலைகளுக்கும் நாளை (05) விடுமுறை வழங்கப்படவுள்ளதாக [...]