“பிக் பொக்ஸ்” நிகழ்ச்சியில் சேர்ப்பதாக கூறி பலரால் சீரழிக்கப்பட்ட தமிழ் யுவதியும் தாயும்

இமை வானொலியை கேட்க இங்கே அழுத்தவும்

வவுனியாவை சொந்த இடமாகக் கொண்டவர்களும் சுவிஸ்லாந்தில் வசிப்பவர்களுமான தாய் மற்றும் மகளது பாலியல் காட்சிகள் தவறான இணையத்தளம் ஒன்றில் காட்சியிடப்பட்டுள்ளது.

இதனையடுத்து சுவிஸ் பொலிசாருக்கு இது தொடர்பாக முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. வவுனியாவைப் பூர்வீகமாகக் கொண்ட சுவிஸ்லாந்தில் பிறந்து வளர்ந்த ”ரிக்ரொக்” பிரபலமான 22 வயதான தமிழ் யுவதியை ஐரோப்பாவில் நடிகர்கள் மற்றும் நடிகைகள், பாடகர்களை அழைத்து நிகழ்ச்சி நடாத்தும் தமிழர் ஒருவர் தொடர்பு கொண்டுள்ளார்.

குறித்த யுவதியை 2022 ம் ஆண்டு நடக்க இருக்கும் ”பிக்பொஸ்” நிகழ்ச்சியில் சேர்த்து விடுவதாக கூறியுள்ளார்.

இதனையடுத்து குறித்த யுவதி சந்தோசத்தில் துள்ளிக் குதித்துள்ளார். அத்துடன் தனது தாயையும் அழைத்துக் கொண்டு இரு தடவைக்ள இந்த வருட முற்பகுதியில் குறித்த தமிழருடன் தமிழ்நாட்டுக்குச் சென்று வந்துள்ளார்.

இந் நிலையில் கடந்த மாத முற்பகுதியில் தாய் மற்றும் மகளின் பாலியல் உறவுக் காட்சிகள் தவறான இணையத்தளம் ஒன்றில் காட்சிப்படுத்தப்பட்டதாகத் தெரியவருகின்றது. அத்துடன் யுவதியின் ரிக்ரொக் பெயருடன் கூடிய தலைப்பை இட்டு தாய் மற்றும் மகள் என குறித்த காட்சிகள் காட்டப்பட்டுள்ளது.

யுவதி மற்றும் தாயார் மயக்க நிலைபோன்ற தோற்றத்துடன் தனித் தனி அறைகளில் படுத்திருப்பது போன்றும் அந் நேரம் அங்கு வருபவர்கள் இருவருடனும் உறவு கொள்வது போன்றும் காட்சிப்படுத்தப்பட்டதுடன் இருவரது முகங்களும் குறித்த நபர்களால் தெளிவாகக் காட்டப்பட்டுள்ளன.

குறித்த யுவதி ரிக்ரொக் வீடியோ செய்யும் போது தனது தாயையும் அதற்குள் சிலதடவைகள் சேர்த்து வீடியோ செய்திருந்தார். இந் நிலையில் குறித்த தவறான தளத்தில் வெளியாகிய வீடியோவை பார்த்து அந்த வீடியோவில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது சுவிஸ் யுவதி என அறித்து அவர்களுக்கு இது தொடர்பாக தகவல்களை சிலர் கூறியுள்ளார்கள். இதனையடுத்து யுவதி மற்றும் தாயார் சுவிஸ் பொலிசாரிடம் இந்த வீடியோ தொடர்பாக முறைப்பாடு கொடுத்துள்ளதாகத் தெரியவருகின்றது.

இச் சம்பவம் தொடர்பாக யுவதியுடன் நெருக்கமானவர்கள் தெரிவித்த தகவலின் படி தன்னைத் தொடர்பு கொண்டவர் பிரபல ஊடகம் ஒன்றின் செயற்பாட்டாளர் எனவும் அத்துடன் வெளிநாட்டுக்கு இந்திய பாடகர்கள் மற்றும் நடிகர்களை அழைத்து வந்து நிகழ்ச்சி செய்பவர்களில் ஒருவர் எனவும் தெரிவித்துள்ளார்.

அத்துடன் அவரை நம்பி தாம் தமிழ் நாடு போன போது அங்குள்ள பிரபல ஹோட்டலில் தானும் தாயாரும் தங்க வைக்கப்பட்டதாகவும் அதன் பின்னரே இவ்வாறான செயற்பாடு நடந்துள்ளது எனவும் தமக்கு மயக்க மருந்து கொடுத்தே இப்படி செய்துள்ளார்கள் எனவும் யுவதி தெரிவித்துள்ளார். அத்துடன் குறித்த நபருக்கு எதிராகவே தாம் பொலிசில் முறையிட்டுள்ளதாகவும் அவர் ஜேர்மன் தமிழ்க் குடும்பஸ்தர் எனவும் யுவதி தெரிவித்துள்ளார்.

யுவதியின் 46 வயதான தாய் விவாகரத்தானவர் என்பது குறிப்பிடத்தக்கது.

தவறான வீடியோவில் யுவதி மற்றும் தாயாருடன் உறவு கொள்பவர்கள் தமது முகத்தை காட்டாது இவர்களையே முழுவதுமாக வீடியோவில் பதிவு செய்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.