வீதியோரத்தில் கைவிடப்பட்ட குழந்தை


பொல்பித்திகம, கொருவா, பூகொல்லாகம பகுதி வீதியோரத்தில் கைவிடப்பட்ட நிலையில் இன்று (02) காலை குழந்தையொன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொல்பித்திகம பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

பொல்பித்திகமவில் இருந்து ஹிரிபிட்டிய வீதிக்கு செல்லும் வீதியின் ஓரத்தில் உள்ள பூகொல்லாகம வெலயா என்ற இடத்தில் குழந்தை ஒன்று அழும் சத்தம் கேட்டதனை அவ்வழியாக சென்ற ஒருவர் கேட்டுள்ளார்.

இது தொடர்பில் பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டதையடுத்து பொலிஸ் குழுவொன்று அங்கு சென்று சிசுவை மீட்டு பொல்பித்திகம ஆரம்ப வைத்தியசாலையின் மகப்பேறு பிரிவில் அனுமதிக்க நடவடிக்கை எடுத்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *