யாழில் பெண்ணின் திருவிளையாடல் – மூவர் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு

யாழ்.பண்டத்தரிப்பு – வடலியடைப்பு பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர் கனடாவிற்கு அனுப்புவதாக கூறி 42 இலட்சத்து 50 ஆயிரம் ரூபாவினை பெற்றுவிட்டு ஏமாற்றியதாக மானிப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
பணத்தினை பெற்றுவிட்டு பல மாதங்கள் ஆகியும் குறித்த பெண், முறைப்பாடு பதிவு செய்தவரை கனடாவிற்கு அனுப்பாமலும், பெற்றுக் கொண்ட பணத்தினையும் மீள வழங்காமலும் இருந்த காரணத்தினால் இவ்வாறு முறைப்பாடு பதிவுசெய்யப்பட்டுள்ளது.
குறித்த பெண் கனடாவிற்கு அனுப்புவதாக கூறி தங்களிடம் 55 இலட்சம் மற்றும் 44 இலட்சத்து 35 ஆயிரம் ரூபாவினை பெற்றுவிட்டு ஏமாற்றுவதாக, கடந்தவாரம் இருவர் மானிப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ள நிலையில் மேலும் ஒருவர் இவ்வாறு முறைப்பாடு பதிவு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
இது தொடர்பில் மானிப்பாய் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
Related Post

யாழில் டெங்கு, சுவாச தொற்று மற்றும் உண்ணிக் காய்ச்சல் பரவலும் தீவிரம்
தற்போதைய காலப்பகுதியில் டெங்கு நோய்க்கு மேலதிகமாக வேறு நோய்களும் பரவுகிறது என தெரிவித்த [...]

யாழில் சிறுவர் இல்லத்திலிருந்து மாயமான சிறுமிகள்
கோப்பாய் காவல்துறை பிரிவிற்குற்பட்ட உரும்பிராய் பகுதியில் இயங்கும் சிறுவர் இல்லத்தை சேர்ந்த மூன்று [...]

யாழ் வடமராட்சியில் பொலிஸார் அதிரடி – 4 பேர் கைது
யாழ்.நெல்லியடி பொலிஸ் பிரிவில் ஹெரோயின் போதைப் பொருளுடன் வடமராட்சி பகுதியில் 4 பேர் [...]