முல்லைத்தீவில் காட்டுயானை தாக்கி ஒருவர் பலி


முல்லைத்தீவு மாவட்டத்தின் ஒட்டுசுட்டான் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஒட்டுசுட்டான் மாங்குளம் வீதியில் 20 ஆவது கிலோமீற்றர் வனப்பகுதியில் காட்டுயானை தாக்கி சின்னசாளம்பனைச் சேர்ந்த ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இன்று மாலை மண்வெட்டி பிடி வெட்டுவதற்காக சென்ற வேளையிலே இந்த அனர்த்தம் இடம் பெற்றுள்ளது.

இந்த அனர்த்தத்தில் வவுனியா மெனிக்பாம் கிராமத்தை சேர்ந்த ஒட்டுசுட்டான் சின்னச்சாளம்பனில் வசித்து வருகின்ற பச்சைமுத்து புலேந்திரன் (வயது48) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற ஒட்டுசுட்டான் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *