சக்திவாய்ந்த நிலநடுக்கம் – சுனாமி எச்சரிக்கை

தெற்கு பசிபிக்கில் உள்ள டோங்காவில் நீருக்கடியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இதனால், சுனாமி எச்சரிக்கை கொடுக்க அதிகாரிகள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
இது குறித்து அமெரிக்க புவியியல் ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது : தெற்கு பசிபிக்கில் உள்ள டோங்கா தீவின் தென்கிழக்குப் பகுதியில் நீருக்கடியில் 24.8 கிலோ மீட்டர் ஆழத்தில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 7.3 ஆக பதிவாகியுள்ளது.
சக்திவாய்ந்த நிலநடுக்கம் என்ற போதிலும் அதனால் பெரிய அளவில் பாதிப்பு ஏதும் இருக்காது என எதிர்பார்க்கப்படுகிறது. அமெரிக்க சுனாமி எச்சரிக்கை மையம் சார்பில் சுனாமி எச்சரிக்கை விடுக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கடந்த ஜனவரியில் டோங்கா தீவில் நீருக்கு அடியில் உள்ள எரிமலை வெடித்ததில் 3 பேர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.
Related Post

துருக்கியில் 39 இலங்கையர்களுடன் சென்ற பேருந்து விபத்து – 27 பேர் காயம்
துருக்கியில், இஸ்தான்புல் விமான நிலையத்தில் பணிபுரியும் இலங்கையர்களை ஏற்றிச் சென்ற பேருந்து கவிழ்ந்து [...]

உயிரை பணயம் வைத்து நீரில் மூழ்கிக்கொண்டிருந்த யுவதியை காப்பாற்றிய பொலிஸ்
புத்தளம், வென்னப்புவ பொலிஸ் போக்குவரத்து பிரிவைச் சேர்ந்த இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர்கள் உயிரை [...]

குளியாப்பிட்டிய விபத்து – 14 வயது சிறுவன் உட்பட மூவர் கைது
குளியாப்பிட்டிய, கனதுல்ல பிரதேசத்தில் டிபென்டர் வாகனம் ஒன்றும் மோட்டார் சைக்கிள் ஒன்றும் மோதி [...]