6 பேரை திருமணம் செய்த பெண் – காத்திருந்த அதிர்ச்சி

இமை வானொலியை கேட்க இங்கே அழுத்தவும்

தமிழகத்தில் பெண்ணொருவர் 6 திருமணம் செய்தநிலையில் 7வது திருமணத்திற்கு தயாராகி மண மேடைக்கு வந்தபோது 6வது கணவர் அவரை சிக்க வைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த தனபால் (35) இவருக்கும் மதுரையைச் சேர்ந்த சந்தியா (26) என்பவருக்கும் கடந்த 7ஆம் திகதி திருமணம் நடந்துள்ளது.

புரோக்கர் வேலை பார்த்த பாலமுருகன்
இவர்களுக்கு மதுரையைச் சேர்ந்த பாலமுருகன் என்பவர் தான் புரோக்கர் வேலை பார்த்து திருமணத்தை ஏற்பாடு செய்துள்ளார். திருமணத்தின் போது பெண் வீட்டின் தரப்பில் இருந்து பெண்ணின் அக்கா,மாமா ஆகிய 2 நபர்கள் மட்டுமே கலந்து கொண்டுள்ளனர்.

இவர்களும், வரன் பார்த்து கொடுத்த புரோக்கரும் திருமணம் முடிந்த கையோடு ரூ.1.50 லட்சம் கமிஷனாக வாங்கி சென்றுள்ளனர்.

இதனிடையே கடந்த 9 ஆம் திகதி காலை தனபால் எழுந்து பார்த்த போது சந்தியா பீரோவில் வைத்திருந்த கல்யாண பட்டுப்புடவை, நகைகள், தான் கொண்டு வந்த துணிகளை எடுத்துக் கொண்டு மாயமானதை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார்.

அதன் பின்னர் காவல்நிலையத்தில் தனது மனைவியை காணவில்லை என புகார் அளித்துள்ளார்.

போட்டோவால் சிக்கிய சந்தியா
இந்த நிலையில் தான் அதே பகுதியைச் சேர்ந்த ஒருவருக்கு திருமணத்துக்கு பெண் பார்த்த போது சந்தியாவின் போட்டோ வந்துள்ளது. இதை பார்த்து அதிர்ந்து போன 6வது கணவர் அதிர்ச்சியடைந்து தன்னை ஏமாற்றியவர்களை பிடிக்க திட்டமிட்டுள்ளார்.

பின்னர் புரோக்கரிடம் தொடர்பு கொண்ட தனபால் வேறஒரு மாப்பிள்ளைக்கு இந்த பெண் பிடித்துள்ளது.எனவே திருமணம் செய்து கொள்ள ஆசைப்படுவதாக தெரிவித்துள்ளார்.

உடனே ஒகே சொன்ன சந்தியாவை போனில் தொடர்பு கொண்டபடி நிச்சயம் செய்துள்ளனர். இந்த நிலையில் நேற்று ஈரோடு மாவட்டம் திருச்செங்கோட்டில் திருமணம் நடைபெற இருந்தது.

இதற்காக மணப்பெண்ணாக வந்தார் சந்தியா, அவருடன் புரோக்கர் , உறவினர் ஐய்யப்பன் ஆகியோரும் வந்துள்ளனர்.

சந்தியா தப்பி ஓட முயன்ற சந்தியா
அங்கு தனது 6வது கணவர் தனபால் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்த சந்தியா தப்பி ஓட முயன்றுள்ளார்.

அவரை கையும், களவுமாக பிடித்த தனபால் மற்றும் உறவினர்கள் பொலிசாரிடம் ஒப்படைத்துள்ளனர்.

அவர்களிடம் பொலிஸார் மேற்கொண்ட விசாரணையில் சந்தியாவுக்கு தனபாலுடன் சேர்த்து இதுவரை 6 பேருடன் திருமணம் நடந்துள்ளது தெரியவந்துள்ளமை பொலிஸாரை அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளது.