ஆட்டோ மீது பொலிஸார் துப்பாக்கி சூடு – இளைஞன் படுகாயம்

பொலிஸாரின் எச்சரிக்கையை மீறி பயணித்த ஆட்டோ மீது பொலிஸார் நடத்திய துப்பாக்கி சூட்டில் இளைஞர் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
குறித்த சம்பவம் திஸ்ஸமகாராம – ரன்மினிதென்ன பகுதியில் இடம்பெற்றுள்ளது. குறித்த பகுதயில் கடமைகளில் ஈடுபட்டிருந்த பொலிஸ் விசேட மோட்டார்சைக்கிள் பிரிவினர் நேற்றிரவு 09 மணியளவில் குறித்த முச்சக்கரவண்டியை சோதனையிடுவதற்காக நிறுத்தியுள்ளனர்.
எனினும் முச்சக்கரவண்டி கட்டளையை மீறி பயணித்ததால் பொலிஸார் துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளனர். சம்பவத்தின் போது 17 வயதான இளைஞர் காயமடைந்துள்ளார்.
தோள்பட்டையில் காயமடைந்த நிலையில் அவர் திஸ்ஸமகாராம வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.கட்டளையை மீறி பயணித்த முச்சக்கர வண்டியின் சாரதியான இளைஞரின் தந்தை கைது செய்யப்பட்டுள்ளார்.
Related Post

விபத்தில் 23 வயது யுவதி பலி – காதலன் படுகாயம்
மீன் வாங்கச் சென்ற இளம் பெண் லொறியில் மோதுண்டு உயிரிழந்துள்ளதுடன், அவரது காதலன் [...]

டொலர் பெறுமதி மேலும் அதிகரிப்பு
இலங்கை மத்திய வங்கியின் தினசரி மாற்று விகிதங்களின்படி, டொலரின் கொள்வனவு விலை 316.29 [...]

யாழில் 20 வயது இளைஞனை கடத்திய கும்பல் – பெரும் பரபரப்பு
யாழ்.பலாலி – அந்தோனிபுரம் பகுதியில் கடந்த 26ம் திகதி கடத்தப்பட்ட 20 வயதான [...]