யாழில் கோப்பாய் கூட்டுறவு எரிபொருள் நிரப்பு நிலையத்தில் குழப்ப நிலை

யாழ்ப்பாணம் – கோப்பாய் கூட்டுறவு எரிபொருள் நிரப்பு நிலையத்தில் இன்று காலை குழப்ப நிலை ஏற்பட்டுள்ளது.
கோப்பாய் பிரதேச செயலக பிரிவினர் சிலர் வந்து, அரச அதிபரின் அறிவுறுத்தலுக்கமைய, அத்தியாவசிய சேவைகளில் ஈடுபடுபவர்களுக்கே எரிபொருள் விநியோகம் இடம்பெறும் என அறிவித்தல் ஒட்டியதால் இக் குழப்ப நிலை ஏற்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
இதனால், அரச ஊழியர்களுக்கு தான் முன்னுரிமையா என, எரிபொருளுக்காக வரிசையில் நின்ற மக்கள் விசனமடைந்தததுடன், ஒட்டிய அறிவித்தலையும் கிழித்து எறிந்துள்ளனர்.
இதையடுத்து, சம்பவ இடத்திற்கு பொலிஸார் வருகை தந்துள்ளனர். மேலும் சிலர் சென்று பிரதேச செயலருடன் பேசுமாறு பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்ததாக அறியமுடிகின்றது.
Related Post

102 வயது வரை மருத்துவ சேவை வழங்கிய கனேடிய மருத்துவர் காலமானார்
கனடாவில் 102 வயது வரையில் மக்களுக்கு சேவை வழங்கிய மருத்துவர் காலமானார். கனடாவின் [...]

யாழில் மோட்டார் சைக்கிளில் சென்று நபர் துப்பாக்கி சூட்டில் பலி
யாழ். தென்மராட்சி, மிருசுவில் வடக்கு வயல்கரை பகுதியில் இருந்து துப்பாக்கிச்சூட்டுக் காயத்துடன் ஆண் [...]

அம்பாறையில் இருந்து சுற்றுலா சென்ற 4 இளைஞர்களும் மரணம்
அம்பாறையில் இருந்து இன்றைய தினம் (21-03-2023) வெல்லவாய – எல்லாவல நீர்வீழ்ச்சியில் நீராடச் [...]