புதுக்குடியிருப்பில் பெண் உள்பட 6 பேர் கைது


புதுக்குடியிருப்பில் பல்வேறு குற்றச் செயல்களுடன் தொடர்புடைய 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், குற்றத்திற்கு பயன்படுத்தப்பட்ட வாள் மற்றும் திருடப்பட்ட நகைகள் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளன.

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் கடந்த வாரம் இடம்பெற்ற மூன்று திருட்டுச் சம்பவங்களுடன் தொடர்புடைய ஆறு சந்தேக நபர்களை புதுக்குடியிருப்பு பொலிஸார் கைது செய்துள்ளனர்.

கடந்த 16ஆம் திகதி தேவிபுரத்தில் வயோதிப தம்பதியினரை கத்தியால் குத்தி படுகொலை செய்தமை மற்றும் விசுவமடுவில் தாலி மற்றும் சங்கிலி பறிப்பு மற்றும் புதுக்குடியிருப்பு கொம்ப பிரதேசத்தில் நகைகள் திருடப்பட்ட சம்பவம் தொடர்பில் சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அவர்கள் திருடிய தங்க நகைகளும் மீட்கப்பட்டுள்ளன. திருட்டில் ஈடுபட்ட மற்றுமொருவரை தேடி வருவதாக புதுக்குடியிருப்பு பொலிஸார் தெரிவித்தனர். திருடப்பட்ட நகைகள் கடைகளில் விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில், அதனை விற்ற பெண் உட்பட 6 பேரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தும் நடவடிக்கையில் மீள்குடியேற்ற பொலிஸார் ஈடுபட்டுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *