திருகோணமலையில் இ.போ.ச பேரூந்து மோதி ஒருவர் படுகாயம்

திருகோணமலை நகரின் துறைமுக வீதியில் இ.போ.ச பேரூந்து மோதியதில் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.
அதே பகுதியைச் சேர்ந்த 41 வயதுடைய ஒருவரே இவ்வாறு காயமடைந்துள்ளார்.
விபத்து நடந்ததையடுத்து, அப்பகுதியில் திரண்ட அப்பகுதி மக்கள் பேரூந்தை தாக்கி சேதப்படுத்தினர்.
பேருந்திற்கு தீ வைக்க முயற்சித்ததையடுத்து, அங்கு வந்த பொலிஸார் குழுவை கலைக்க நடவடிக்கை எடுத்துள்ளனர்.
தற்போது பேருந்து பொலிஸ் நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதுடன் பேருந்தின் சாரதி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பில் திருகோணமலை பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
Related Post

யாழில் வீடொன்றில் தீ விபத்து – 17 வயது மாணவி உயிரிழப்பு
யாழ்ப்பாணம் பண்டத்தரிப்பு பிரான்பற்று பகுதியில் உள்ள வீடொன்றில் நேற்று (02) மாலை இடம்பெற்ற [...]

கச்சா எண்ணெய் விலை அதிகரிப்பு
ரஷ்யா தனது எண்ணெய் உற்பத்தியை குறைக்கப்போவதாக தெரிவித்ததை அடுத்து சர்வதேச சந்தையில் கச்சா [...]

புகையிரதத்துடன் மோதி 2 குழந்தைகள் மற்றும் பெண் பலி
ஆராச்சிக்கட்டுவ மய்யாவ பகுதியில் மோட்டார் சைக்கிள் புகையிரதத்துடன் மோதி இடம்பெற்ற விபத்தில் பெண் [...]