யாழ் உரும்பிராயில் ஆசிரியை மரணம்

காய்ச்சலினால் பாதிக்கப்பட்டிருந்த ஆசிரியை ஒருவர் உயிரிழந்துள்ள சம்பவம் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றுள்ளது.
உரும்பிராயைச் சேர்ந்த மூன்று பிள்ளைகளின் தாயாரான சுகந்தன் ஜான்சி என்ற ஆசிரியையே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
சில நாட்கள் காய்ச்சலினால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் தனியார் வைத்தியசாலை ஒன்றில் சிகிச்சை பெற்றுள்ளார்.
இந்நிலையில், திடீரென உடல்நிலை மோசமடைந்ததை அடுத்து நேற்று முன்தினம் தெல்லிப்பளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு அங்கிருந்து யாழ்.போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டிருந்தார்.
யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் திங்கட்கிழமை சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
அவரது சடலம் மீதான பிரேத பரிசோதனைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிரேம்குமார் மேற்கொண்டார்.
அவரது உடற்கூற்று மாதிரிகள் பகுப்பாய்விற்காக கொழும்புக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
Related Post

ஜனாதிபதி செயலகம் வெளியிட்டுள்ள அவசர அறிவிப்பு
ஜனாதிபதி செயலகத்தின் பெயர்ப்பலகையை தமது வாகனங்களில் காட்சிப்படுத்த வேண்டாம் என ஜனாதிபதி செயலகத்தின் [...]

பாடசாலைகளை சுற்றி புலனாய்வுப் பிரிவினர்
பாடசாலை மாணவர்களுக்கு போதை மாத்திரைகள் உள்ளிட்ட போதைப் பொருட்களை விற்பனை செய்யும் வர்த்தகர்களை [...]

10 வயது சிறுவன் கத்தியால் குத்திக் கொல்லப்பட்ட கொடூரம்
கணவன் – மனைவிக்கிடையில் உருவான வாய்த்தர்க்கம் மோதலாக மாறிய நிலையில் கத்திக் குத்துக்கு [...]