யாழ். நவாலியில் இளைஞன் மீது சரமாரி வாள்வெட்டு


யாழ்.நாவலி பகுதியில் இளைஞன் ஒருவன் மீது வாள்வெட்டு குழுவினால் சரமாரியான வாள்வெட்டுத் தாக்குதல் நடத்தப்பட்டிருக்கின்றது.

கோண்டாவில் பகுதியை சேர்ந்த ச.துசாளன் (வயது18) என்ற இளைஞன் மீதே நேற்று இரவு வாள்வெட்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

நவாலி கிழக்கு பகுதியில் உள்ள நண்பனின் பிறந்தநாளுக்கு சென்று விட்டு மீண்டும் வீடு நோக்கி மோட்டார் சைக்கிளில் பயணித்துக்கொண்டிருந்த வேளை

நவாலி சம்பந்தப்பிள்ளையார் ஆலயத்திற்கு அருகில் இரண்டு மோட்டார் சைக்கிளில் வந்த 5 பேர் கொண்ட வன்முறை குழு இவ்வாறு வாள்வெட்டினை மேற்கொண்டுள்ளது.

தாக்குதலுக்கு இலக்கான இளைஞன் வன்முறை கும்பலின் தாக்குதலில் இருந்து தப்பிக்கொள்வதற்காக வீதியில் ஓடிய போதிலும்

துரத்தி துரத்தி சரமாரியாக வாள் வெட்டினை மேற்கொண்டு விட்டு வன்முறை கும்பல் அவ்விடத்தில் இருந்து தப்பி சென்றுள்ளது.

தாக்குதலுக்கு இலக்கான இளைஞனை அவ்விடத்தில் நின்றவர்கள் மீட்டு, யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

சம்பவம் தொடர்பில் மானிப்பாய் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *