சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை மின்வெட்டு விபரம்

இமை வானொலியை கேட்க இங்கே அழுத்தவும்

வார இறுதியில் நாட்டில் மின்வெட்டை மேற்கொள்ள இலங்கை மின்சார சபை முன்வைத்த கோரிக்கைக்கு இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது.

அதன்படி, நாளைய தினம் 3 மணித்தியாலங்களும் 20 நிமிடங்களும் மின் வெட்டு அமுல்ப்படுத்தப்படவுள்ளது.

இதற்கமைய, A,B,C,D,,E,F,G,H,I,J,K,L,M,N,O,P,Q,R,S,T,U,V,W ஆகிய வலயங்களுக்கு காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரையிலான காலப்பகுதியில் இரண்டு மணித்தியாலங்கள் மின் வெட்டு அமுல்ப்படுத்தப்படவுள்ளது.

மேலும், மாலை 5 மணி முதல் இரவு 9 மணி வரையிலான காலப்பகுதியில் ஒரு மணித்தியாலமும் 20 நிமிடங்களும் மின்வெட்டு அமுல்ப்படுத்தப்படவுள்ளதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் தெரிவித்தார்.

அதேபோல், ஞாயிற்றுக்கிழமை (24) அனைத்து வலயங்களுக்கு 3 மணி நேரம் மட்டுமே மின் வெட்டு அமுல்ப்படுத்தப்படும் என அவர் தெரிவித்தார்.

அதன்படி, காலை 9 மணி முதல் மாலை 5.20 மணி வரை 1 மணி நேரம் 40 நிமிடங்களும், மாலை 5.20 மணி முதல் இரவு 9.20 மணி வரை 1 மணி நேரம் 20 நிமிடங்களும் மின்வெட்டு அமுல்ப்படுத்தப்படும்.