அரசாங்கம் திட்டமிட்டு நாட்டை அழித்துள்ளது – சஜித்

இமை வானொலியை கேட்க இங்கே அழுத்தவும்

நாடு இன்று எதிர்நோக்கும் நெருக்கடிகள் தொடர்பில் கடந்த சில வருடங்களுக்கு முன்னர் பாராளுமன்றத்தில் கருத்துக்களை முன்வைத்திருந்த போதிலும் ஆளும் தரப்பு அவைகளையெல்லாம் கேலி செய்ததாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

இன்று (19) பாராளுமன்றத்தில் விசேட உரையொன்றை ஆற்றிய போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

மேலும் கருத்து தெரிவித்த சஜித் பிரேமதாச, தற்போதைய அரசாங்கம் திட்டமிட்டு நாட்டை அழித்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

தௌிவாக இந்த அரசாங்கம் நாட்டையும், மக்களையும் ஏமாற்றியுள்ளது. இது சிறிய குற்றமல்ல. இந்நாட்டில் உள்ள 220 இலட்சம் மக்களை படு குழிக்குள் தள்ளிய பெரும் குற்றம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.