3 ஆவது முறையாகவும் பிரதமரானார் நரேந்திர மோடி

இமை வானொலியை கேட்க இங்கே அழுத்தவும்

பிரதமர் நரேந்திர மோடி இந்தியாவின் பிரதமராக 3 ஆவது முறையாக பதவியேற்றுக் கொண்டார். டில்லியில் குடியரசுத் தலைவர் மாளிகையில் இன்று மாலை சரியாக 7.23 நடந்த பிரம்மாண்ட பதவியேற்பு விழாவில் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, மோடிக்கு பதவிப் பிரமாணமும், ரகசியக் காப்புப் பிரமாணமும் செய்து வைத்தார்.

‘நான் நரேந்திர தாமோதரதாஸ் மோடி, கடவுளின் பெயரால்..’ என்று ஆரம்பித்து மோடி பிரதமராகப் பதவியேற்றுக் கொண்டார். முன்னதாக தேசிய கீதம் இசைக்கப்பட்டது. விழாவுக்கு திரண்டிருந்த ஆதரவாளர்கள் பாரத் மாதா கி ஜி என்று பலத்த கோஷம் எழுப்பினர்.