பொலிஸார் துப்பாக்கி சூடு – பெண் பலி

இமை வானொலியை கேட்க இங்கே அழுத்தவும்

மதுபான நிலையத்தை கொள்ளையிட முயற்சித்தவர்கள் மீது நடத்தப்பட்ட துப்பாக்கி சூட்டில் வீதியால் பயணித்த பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

குறித்த சம்பவம் இன்று அதிகாலை மீரிகம தங்ஹோவிட பகுதியில் இடம்பெற்றிருப்பதாக கொழும்பு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

பிரதேசத்திலுள்ள மதுபான நிலையத்தில் கொள்ளையடிக்க வந்த சந்தேக நபர்கள் மீது பொலிசார் துப்பாக்கிச்சூடு நடத்தியதாக கூறப்படுகிறது.

இதன்போது பொலிஸாரின் இலக்கு தவறி பேருந்தில் பயணித்த பெண்ணொருவர் மீது துப்பாக்கி குண்டு பாய்ந்துள்ளதாக கொழும்பு ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன.

துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்த 29 வயதுடைய பெண்ணின் சடலம் வத்துபிட்டிவல வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் தங்ஹோவிட பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.