மூதூரில் மனைவியை கொடூரமாக தாக்கிய கணவன் கைது

இமை வானொலியை கேட்க இங்கே அழுத்தவும்

பெண் ஒருவரை கொடூரமாக தாக்கும் காணொளி ஒன்று வௌியாகியுள்ளது.

குறித்த பெண்ணின் கணவன் அப்பெண்ணை இவ்வாறு கொடூரமாக தாக்கியுள்ளதோடு பல முறை மின் கம்பத்தில் பெண்ணின் தலையை மோத குறித்த நபர் முற்பட்டுள்ளார்.

மூதூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கிளிவெட்டி பிரதேசத்தில் இந்த சம்பவம் நேற்று (28) இடம்பெற்றுள்ளது.

தாக்குதல் இடம்பெற்ற போது பெருமளவிலான மக்கள் அங்கு இருந்த போதிலும், அவளை காப்பாற்ற எந்த முயற்சிகளையும் மேற்கொள்ளவில்லை.

இந்த சம்பவத்தை அருகில் இருந்த ஒருவர் தனது கைப்பேசியில் பதிவு செய்துள்ளார்.

தாக்குதலுக்கு உள்ளான பெண்ணின் கணவர் மூதூர் பொலிஸாரால் நேற்று பிற்பகல் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.