கணவனின் இறந்த உடலை 18 மாதங்கள் வீட்டில் வைத்திருந்த பெண்

இமை வானொலியை கேட்க இங்கே அழுத்தவும்

உத்தரப் பிரதேசத்தை சேர்ந்த பெண் ஒருவர் தனது கணவர் கொரோனாவால் உயிரிழந்த நிலையில், அவர் இறக்கவில்லை என நினைத்து கொண்டு கணவர் மீண்டும் குணமாகி வரவேண்டும் என கோரி 18 மாதங்களாக கங்கை நீரை கணவரின் உடல் முழுவதும் தெளித்து வந்துள்ளார்.

குறித்த பெண்ணிடம் வைத்தியர்கள் இறப்பு சான்றிதழ் அளித்தும் கணவரை அடக்கம் செய்யாமல் அழுகிய நிலையிலேயே வீட்டில் வைத்து பராமறித்து வந்துள்ளார்.

கணவர் மீது உள்ள அதீத காதலால் மனைவி இவ்வாறு மனநலம் பாதிக்கப்பட்டுள்ளார் என தெரிய வந்துள்ளது. இது எல்லோர் மத்தியிலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.