வெளிநாட்டில் இருந்து திரும்பி வந்த மனைவியின் கழுத்தை அறுத்து கொலை செய்த கணவன்

இமை வானொலியை கேட்க இங்கே அழுத்தவும்

தம்புள்ளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கொட்டாவெல பிரதேசத்தில் கணவன் தனது மனைவியின் கழுத்தை அறுத்து கொலை செய்துள்ளார்.

இக்கொலை சம்பவம் நேற்று (04) இரவு இடம்பெற்றுள்ளதாக தம்புள்ளை பொலிஸார் தெரிவித்தனர்.

கொட்டாவெல பிரதேசத்தைச் சேர்ந்த 42 வயதான கீதா குமாரி கருணாதிலக என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்த பெண் கடந்த 31ஆம் திகதி வெளிநாட்டில் இருந்து திரும்பி வந்து தாய் வீட்டில் இருந்த போது கணவனால் கழுத்தை அறுத்து கொலை செய்யப்பட்டுள்ளார்.

இருவருக்குமிடையில் நீண்டகாலமாக நிலவி வந்த குடும்ப தகராறு காரணமாக இந்த கொலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சடலம் சம்பவம் இடம்பெற்ற இடத்தில் பொலிஸ் பாதுகாப்பில் வைக்கப்பட்டுள்ளதுடன், நீதவான் விசாரணை இன்று (05) இடம்பெறவுள்ளது.

கொலையை செய்த சந்தேக நபர் தற்போது பிரதேசத்தை விட்டு தப்பிச் சென்றுள்ளார்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை தம்புள்ளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.